விரைவு பேருந்து: முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்

சென்னை: தீபாவளியை ஒட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க அரசு விரைவுப் பேருந்து கழகம் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அக்டோபர்.28, 29, 30ல் சென்னையில் இருந்து இயக்கப்படும் 2,092 விரைவு பேருந்துகளுடன் 4,900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 3 நாட்கள் 11,176 விரைவு பேருந்துகள், பிற முக்கிய ஊர்களிலிருந்து பல இடங்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகள். தீபாவளியை ஒட்டி 14,086 விரைவு பேருந்துகள் இயக்கப்படுவதாக விரைவு பேருந்து போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post விரைவு பேருந்து: முன்பதிவு செய்ய அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: