ஏழாயிரம்பண்ணை அருகே மரத்தடியில் பட்டாசு தயாரித்தவர் கைது

ஏழாயிரம்பண்ணை, அக்.26: ஏழாயிரம்பண்ணை அருகே மரத்தடியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது செய்யப்பட்டார்.  விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, சுப்பிரமணியாபுரம், விஜயகரிசல்குளம், ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் ஏழாயிரம் பண்ணை அருகே வெள்ளையாபுரம் மேற்கு தெருவில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆபீஸிற்கு எதிரே உள்ள மரத்தடியில் பட்டாசு தயாரிப்பதாக ஏழாயிரம் பண்ணை காவல் சார்பு ஆய்வாளர் ராமமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அதில் எந்தவிதமான அரசு அனுமதி இல்லாமல் திரி பொருத்தப்பட்டுள்ள வெடிகள் தயாரித்து வந்தது தெரியவந்தது. சுமார் ரூ.2000 மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த அன்பின் நகரம் பகுதியைச் சேர்ந்த சவுந்தரபாண்டி(37) என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்

The post ஏழாயிரம்பண்ணை அருகே மரத்தடியில் பட்டாசு தயாரித்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: