நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவர் கைது

நெல்லை, அக்.26: திசையன்விளை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2004ம் ஆண்டு திருட்டு வழக்கில் கன்னியாகுமரி மாவட்டம், பெருமாள்புரத்தைச் சேர்ந்த காமராஜ் (53) என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 1 வருடம் 10 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு ராதாபுரம் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து காமராஜை திசையன்விளை போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று அவரை கைது செய்து ேகார்ட்டில் ஆஜர்படுத்தினர்.

The post நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: