தவறான மின் இணைப்பு ரூ.71,543 அபராதம் வசூலிப்பு

 

தஞ்சாவூர், அக். 26: மின் இணைப்புகளை தவறாக பயன்படுத்திய வரிடமிருந்து ரூ.71,543 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தஞ்சாவூர் மின் பகிர்வான மேற்பார்வை பொறியாளர் நளினி தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தஞ்சாவூர் மின்பகிர்மான வட்டம் கும்பகோணம் கோட்டம் கும்பகோணம் நகர் உபகோட்டம் கிழக்கு கும்பகோணம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் தஞ்சாவூர் மின்பகிர்மான வட்ட பொது செயற்பொறியாளர் விமலா தலைமையில் வட்ட கூட்டுக்குழு ஆய்வு நடைபெற்றது.

அதில் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் என 6 அலுவலர்கள் கலந்துக் கொண்டனர். மேலும் அந்த கூட்டத்தில் 3524 மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 7 மின் இணைப்புகளில் வீதப்பட்டி தவறாக பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு அபராத தொகை ரூ.71,543 விதிக்கப்பட்டுள்ளது.

The post தவறான மின் இணைப்பு ரூ.71,543 அபராதம் வசூலிப்பு appeared first on Dinakaran.

Related Stories: