சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறப்பு

திருவனந்தபுரம்: 2024ம் ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட உள்ளது. மகரவிளக்கு பூஜை 2025 ஜனவரி 14ம் தேதி நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மண்டல பூஜைக்காக கோயில் நடை நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டு டிசம்பர் 26ம் தேதி நடை சாத்தப்படும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி கோயில் நடை அடைக்கப்படும்.

The post சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: