காங். முன்னாள் எம்பி விடுதலையை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு: டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: டெல்லி கலவர வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்பி சஜ்ஜன் குமாரை விடுதலை செய்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் ஏற்று கொண்டது. கடந்த 1984ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் பயங்கர கலவரம் ஏற்பட்டது.

இதில் பலர் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் முன்னாள் எம்பி சஜ்ஜன் குமார் உள்ளிட்ட பலர் மீது வழக்கு தொடரப்பட்டது. சுல்தான்புரியில் இந்த வழக்கில் இருந்து சஜ்ஜன்குமார் மற்றும் 2 பேரை டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு விடுதலை செய்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

The post காங். முன்னாள் எம்பி விடுதலையை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு: டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: