இதுகுறித்து புனேயில் நடந்த நிகழ்ச்சியில் ஜெயசங்கர் பேசுகையில், ‘இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைக்க இன்னும் சில கால அவகாசம் தேவைப்படும். இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர பேச்சுவார்த்தை காரணமாக, தற்போதைய ஒப்பந்தம் சாத்தியமானது. எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.
சமீபத்திய ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்தியா-சீனா இடையிலான உறவுகள், மிக விரைவில் சுமூகமாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் நாம் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். அவர்களும் அட்ஜஸ்ட் ஆக வேண்டும். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக பதற்றம் தொடர்கிறது. இயல்பு நிலை உருவாக சிறிது காலம் பிடிக்கலாம். ஒன்றாகச் செயல்பட வேண்டுமானால், ஒருவரை ஒருவர் நம்ப வேண்டும்’ என்று கூறினார்.
The post இந்தியா – சீனா படைகள் வாபஸ்; நம்பிக்கையை மீட்டெடுக்க சிறிது காலம் தேவை: வௌியுறவு அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.