நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடம் உறுதி தன்மையுடன் உள்ளது: அரசு தகவல்

சென்னை: சென்னை, தலைமை செயலக அலுவலக வளாகம், நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள வேளாண்மை துறை சார்ந்த பிரிவுகள் செயல்பட்டு வரும் அறையின் தரையில் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட ஓடுகள் தட்பவெப்ப நிலை மாற்றத்தின் காரணமாக, உள்ளிருக்கும் காற்று விரிவடைந்ததால், 6 X 15 அளவில் பெயர்ந்தது. கட்டிடத்தின் தரை ஓடுகளின் கீழுள்ள கான்கிரீட் பகுதியில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடம் உறுதித் தன்மையுடன் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடம் உறுதி தன்மையுடன் உள்ளது: அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: