இலங்கை அரசை ஒன்றிய அரசு கண்டிக்க ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: நாகை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 12 பேரை இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு அருகே கைது செய்து, அவர்களின் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்து சென்றனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தொடர்கிறது.

எனவே ஒன்றிய அரசு குறிப்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களையும், விசைப்படகையும் மீட்கவும், இனிமேலும் இது போன்ற கைது நடவடிக்கை தொடரக் கூடாது என்பதற்காக அவசரக் கூட்டம் நடத்தியும், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒன்றிய அரசு இலங்கை அரசிடம் கண்டிப்போடு பேசி தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர முடிவு காண வேண்டும்.

The post இலங்கை அரசை ஒன்றிய அரசு கண்டிக்க ஜி.கே.வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: