மேலும் 12 மீனவர்கள் கைது நிரந்தர நடவடிக்கை எடுக்க அன்புமணி வேண்டுகோள்

சென்னை: தமிழக மீன்வர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை : நாகை மாவட்டத்திலிருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

இன்றைய சூழலில் மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பது தான் தலையாயத் தேவை ஆகும். இதை கருத்தில் கொண்டு கைது செய்யப்பட்ட மீனவர்களை, அவர்களின் படகுடன் உடனடியாக விடுதலை செய்வதற்கும், நாளை மறுநாள் நடைபெறவுள்ள இந்திய , இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தில் மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மேலும் 12 மீனவர்கள் கைது நிரந்தர நடவடிக்கை எடுக்க அன்புமணி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: