அக்கரைப்பள்ளியில் கடற்கரை பூங்கா அமைக்க வேண்டும்

வேதாரண்யம், அக்.24: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறைக்கு வருகை தந்த நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜை கூட்டணி கட்சியினர், ஜமாத்தார்கள் , பொதுமக்கள் வரவேற்றனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட துணை செயலாளர் அஹமதுல்லாஹ் தலைமையில் எம்பி செல்வராஜிக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர். பின்னர் மஜக சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில், தோப்புத்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களின் உடல் ஆரோக்கியம், பொழுது போக்கை கவனத்தில் கொண்டு, பெரியக்குத்தகை, அக்கரைப்பள்ளி கடற்கரையில் பொழுபோக்குடன் கூடிய கடற்கரை பூங்கா அமைக்க வேண்டும். தோப்புத்துறை ஆறுமுகச்சந்தியில் உயர்நிலை பயணிகள் நிழற்பந்தல் அமைக்க வேண்டும். வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் இருந்து வேளாங்கண்ணி செல்ல ரயில் போக்குவரத்துக்கு வசதி துவங்க வேண்டும். கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் காணும் விதத்தில் கேபிள் கார் அமைத்துதர வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post அக்கரைப்பள்ளியில் கடற்கரை பூங்கா அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: