மாநில குத்துச்சண்டை போட்டிக்கு க.கோட்டை மெட்ரிக்.பள்ளி மாணவர்கள் தேர்வு

கந்தர்வகோட்டை, அக்.24: கந்தர்வகோட்டை அருள்மாரி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை நகரில் உள்ள அருள்மாரி மெட்ரிக் பள்ளியில் படிக்கும் மாணவர் யோக தேவா மாவட்ட அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாவட்ட அளவில் முதலிடமும், இதபோல் மாணவர் கபிலன் மாவட்ட அளவில் மூன்றாம் இடமும் பெற்றனர். இவர்கள் மாநில அளவில் நடைபெற உள்ள குத்து சண்டை போட்டியில் கலந்துகொள்ள தேர்வாகி உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் கருப்பையன், நிர்வாகி செந்தில்நாதன் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் பாராட்டு தெரிவித்தனர்.

The post மாநில குத்துச்சண்டை போட்டிக்கு க.கோட்டை மெட்ரிக்.பள்ளி மாணவர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: