தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் தென்பெரம்பூரில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்

தஞ்சாவூர், அக். 24: வெண்ணாற்றின் குறுக்கே தென்பெரம்பூரில் உயர்மட்ட பாலம் அமைப்பது தொடர்பாக தஞ்சாவூர் எம்பி முரசொலி ஒன்றிய அமைச்சரிடம் மனு வழங்கினார். தஞ்சாவூர் எம்பி முரசொலி நேற்று ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நித்தின் கட்கரியை நேரில் சந்தித்து மனு அளித்தார். அதில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான பல்வேறு சாலை திட்டங்கள், வெண்ணாற்றின் குறுக்கே தென்பெரம்பூரில் உயர்மட்ட பாலம் அமைப்பது மற்றும் திருமலை சமுத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று வர இலகுவாக சுரங்கப்பாதை அமைத்திடவும் கோரிக்கை வைத்தார். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் தென்பெரம்பூரில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: