இன்று டாஸ்மாக் மூடல்

சிவகங்கை, அக்.24: சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன. இன்று திருப்புத்தூரில் நடைபெறும் மருதுபாண்டியர் குரு பூஜையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருப்புத்தூர், மானாமதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, சிவகங்கை நகர், மதகுபட்டி உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட கடைகள் நேற்று மாலை 6மணி முதல் அடைக்கப்பட்டுள்ளன. இன்று முழுவதும் இக்கடைகள் அடைக்கப்படும். நாளை வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post இன்று டாஸ்மாக் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: