இதுகுறித்து விசாரணை நடத்த ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி பஞ்சாபை சேர்ந்த இணையதள பாதுகாப்பு ஆராய்சியாளர் ஹிமான்ஷு பதக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட நபர்கள்தான் தகவல் திருட்டு குறித்து புகார் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சைபர் பாதுகாப்பு குறித்து அவ்வப்போதைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார். ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் நிறுவனம் அனுமதியின்றி தங்கள் இணையதளத்துக்குள் நுழைந்தது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த வாதங்களை பதிவு செய்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 3 கோடி வாடிக்கையாளர்களின் தகவல் திருட்டு விவகாரம்: விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.