திண்டிவனத்தில் காக்கிநாடா எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்தக் கோரி விசிக எம்.பி. ரவிக்குமார் கடிதம்

திண்டிவனம் : திண்டிவனத்தில் காக்கிநாடா எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் ஆகிய 3 விரைவு ரயில்களை நிறுத்தக் கோரி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு விசிக எம்.பி. ரவிக்குமார் கடிதம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “திண்டிவனத்தில் காக்கிநாடா எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரயில்களை நிறுத்த வேண்டும் என அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் உள்ள கோரிக்கைகள் பின்வருமாறு…

*திண்டிவனம் ரயில் நிலையத்தில் அந்த 3 விரைவு ரயில்களையும் நிறுத்தவேண்டும்;

*ரயில் வருகை, புறப்பாடு மற்றும் கோச் நிலைகள் பற்றிய அறிவிப்புகளைக் காண்பிப்பதற்கான அறிவிப்புப் பலகைகளை நிறுவ வேண்டும்;

*காத்திருப்பு அறைகள் மற்றும் நடைமேடைகளில் டிவிக்களை அமைக்கவேண்டும்;

* பயணிகளுக்குக் கழிப்பறைகளை நிறுவ வேண்டும்;

* ஒவ்வொரு நடைமேடையையும் முன்பதிவு அலுவலகம் மற்றும் பார்சல் அலுவலகத்துடன் இணைக்கும் டிராலி பாதையை அமைக்க வேண்டும்

– ஆகிய கோரிக்கைகளையும் சேர்த்து ரயில்வே அமைச்சருக்குக் கடிதம் எழுதி அதன் நகலை அவர்களுக்கு வழங்கினேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டிவனத்தில் காக்கிநாடா எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்தக் கோரி விசிக எம்.பி. ரவிக்குமார் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: