அங்கு விளாங்குறிச்சியில் 2.66 லட்சம் சதுர அடி பரப்பளவில் எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. 2020-ல் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், 4 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து நவம்பர் 4ம் தேதி நடைபெறும் விழாவில் எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேலும் நகரின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் கல்வி வளங்களை மேம்படுத்தும் வகையில் கலைஞர் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.காந்திபுரத்தில், 300 கோடி ரூபாயில் கருணாநிதி நுாற்றாண்டு நுாலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
The post கோவையில் நவ.4-ல் கலைஞர் நூலகத்திற்கு அடிக்கல்.. எல்காட் ஐ.டி. பூங்காவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!! appeared first on Dinakaran.