அரியலூர் நகராட்சி 2வது வார்டில் பள்ளேரி வரத்து வாய்க்கால் சீரமைப்பு

 

அரியலூர், அக். 15: அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டில் பள்ளேரிக்கு செல்லும் வரத்து வாய்க்காலை சரி செய்யும் பணி நடைபெற்றது.
அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கும் சூழலை தவிர்க்கும் விதமாக பள்ளேரிக்கு செல்லும் வரத்து வாய்க்கால் பகுதியில் உள்ள அடர்ந்த புதர்பகுதிகளை அகற்றும் விதமாக திமுக வார்டு கவுன்சிலர் செல்வராணி பரமேஸ்வரன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மெற்கொண்டார்.

The post அரியலூர் நகராட்சி 2வது வார்டில் பள்ளேரி வரத்து வாய்க்கால் சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: