சென்னை: காவல்துறை வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் பாதுகாப்பது போல், நமது வீடுகளைப் பாதுகாப்பவர்கள் காவல் துறையினர். தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துக் கடமையாற்றும் போது உயிர்த்தியாகம் செய்தோர் பலர் என முதலமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார்.