காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15,929 கனஅடியில் இருந்து 18,094 கன அடியாக அதிகரித்துள்ளது. 113 அடியைக் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 97.89 அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.