இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி, இர்பான் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. நேற்று, அவர் தனது மனைவி பிரசவ வலியால் துடிக்கும் காட்சி, குழந்தை பிறந்தவுடன் அதை கையில் ஏந்தி இருக்கும் காட்சிகளை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.
தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி உரிய அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை அறைக்குள் செல்ல வேண்டும் மற்றும் முறையான அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டும் கத்தரிக்கோல் பிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது. இந்நிலையில், யூடியூபர் இர்பான் அறுவைச் சிகிச்சை அறைக்குள் வீடியோ கேமராவை எடுத்து சென்றது மட்டுமின்றி குழந்தைக்கும் தாயுக்கும் இடையே உள்ள தொப்புள்கொடியை வெட்டியதற்கு மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
The post குழந்தை பிறக்கையில் தொப்புள்கொடியை வெட்டும் வீடியோ வெளியீடு.. புதிய சர்ச்சையில் யூடியூபர் இர்பான்!! appeared first on Dinakaran.