இந்நிலையில் சிவில் விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது, “வெடிகுண்டு மிரட்டல் விடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைகள் விதிக்கும் வகையில் தற்போதுள்ள விதிகளில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளில் மாற்றங்கள் செய்வது தொடர்பாக விமான நிறுவனங்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகத்திடமும் ஆலோசித்து வருகிறோம். போலி வெடிகுண்டு மிரட்டல்களை சமாளிக்க வௌிநாடுகளில் பின்பற்றப்படும் விதிமுறைகள் பற்றியும் ஆய்வு செய்து வருகிறோம். மிரட்டல் விடுக்கும் நபர்கள் விமானங்களில் பறக்க தடை விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும்” என்று தெரிவித்தனர்.
The post குண்டு மிரட்டல் விடுப்பவர்கள் இனி விமானத்தில் பறக்க தடை? விமானப்போக்குவரத்து அமைச்சகம் பரிசீலனை appeared first on Dinakaran.