தொடர் வெள்ளப்பெருக்கு கும்பக்கரையில் 5வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

 

பெரியகுளம், அக்.17: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி, கொடைக்கானல் அருகே உள்ள வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும்போது இந்த அருவிக்கு தண்ணீர் வரத்து இருக்கும். இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிப்பதற்கு கடந்த 4 தினங்களுக்கு முன்பு வனத்துறை தடை விதித்தது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அருவியில் தொடர்ந்து நேற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக 5வது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். மேலும் அருவிக்கு வரும் நீரின் வரத்து சீராகும்வரை இந்த தடை தொடரும் என தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறை அதிகாரி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

The post தொடர் வெள்ளப்பெருக்கு கும்பக்கரையில் 5வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை appeared first on Dinakaran.

Related Stories: