மாநகராட்சி செவிலியர் பணி நேர்காணல் தள்ளிவைப்பு

 

கோவை, அக். 17: கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையிலான நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் செவிலியர் பணியாளர்கள் (நிலைய செவிலியர்) காலிப்பணியிடம் நிரப்புவதற்கான நேர்காணல் நாளை (வெள்ளி) மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற இருந்தது. ஆனால், தமிழகம் முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள தொடர் மழை குறித்த வானிலை அறிக்கை எச்சரிக்கையினை தொடர்ந்து, கோவை மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் இருந்து நேர்க்காணலில் கலந்துகொள்ள வரும் நபர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, இந்த நேர்காணல் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த நேர்காணல், வரும் 11.11.2024 அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post மாநகராட்சி செவிலியர் பணி நேர்காணல் தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: