மசாஜ் சென்டரில் விபசாரம்

 

கோவை, அக்.11: கோவை காட்டூர் ராஜாஜி சாலையில் தனியார் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் 2 அறைகள் வாடகைக்கு எடுத்து மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இந்த மசாஜ் சென்டரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெற்று வருவதாக கோவை காட்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காட்டூர் போலீசார் அந்த ஓட்டலில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டருக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடைபெற்று வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, அந்த மசாஜ் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டு, அதன் உரிமையாளர் ஸ்ரீராம் (34), மேலாளர் மகேஷ் (26) மற்றும் 3 இளம்பெண்கள் உள்பட மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அந்த 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மசாஜ் சென்டரில் விபசாரம் appeared first on Dinakaran.

Related Stories: