சிறுமுகை சாலையில் ரெக்கவரி வாகனம் மீது முறிந்து விழுந்த மரம் அடுத்தடுத்து கார்கள் மீது மோதி விபத்து

 

மேட்டுப்பாளையம்,அக்.17: மேட்டுப்பாளையம் – சிறுமுகை செல்லும் சாலையில் குத்தாரிபாளையம் அருகே நேற்று முன்தினம் ரெக்கவரி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது.அப்போது சாலையோரம் இருந்த மரம் ஒன்று முறிந்து ரெக்கவரி வாகனத்தின் முன் பகுதி மீது திடீரென விழுந்துள்ளது.இந்த வாகனத்தை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அபு(37) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். திடீரென மரம் முறிந்து விழுந்ததை அதிர்ச்சியில் நிலைதடுமாறி அருகில் இருந்த கார் கன்சல்டன்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் மூன்று கார்களும் சேதமடைந்தன.அக்கம்பக்கத்தினர் ரெக்கவரி வாகனத்தில் இருந்த அபுவை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சிறுமுகை சாலையில் ரெக்கவரி வாகனம் மீது முறிந்து விழுந்த மரம் அடுத்தடுத்து கார்கள் மீது மோதி விபத்து appeared first on Dinakaran.

Related Stories: