திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பாக முதியோர்களுக்கு உணவு வழங்கல்

 

கோவை, அக்.9: தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றதையொட்டி கோவை திமுக தெற்கு மாவட்டம், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்களின் தொமுச சார்பாக போத்தனூரில் உள்ள செயின்ட் ஜோசப் முதியோர் இல்லத்தில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் முதியோர்களுக்கு உணவு வழங்கினார்.
இந்நிகழ்வில் குறிச்சி தெற்கு பகுதி கழக செயலாளர் கார்த்திகேயன், குறிச்சி வடக்கு பகுதி கழக செயலாளர் காதர், பொதுக்குழு உறுப்பினர் ரகு (எ) துரைராஜ், தமிழ்நாடு கடைகள் தொமுச ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் சன்கதிரவன், மாவட்ட செயலாளர் டேனியல் ஜேசுதாஸ், பொருளாளர் வசந்தராஜன், 100வது வட்ட செயலாளர் மேட்டூர் மாணிக்கம்,பொன்சுரேஷ் ஆதவன் ஆறுமுகம்ஸ்ரீதர், சிவா, கார்த்தி, வெங்கடேஸ், தனசேகரன், ரவூப் தண்டபாணி, சிவலிங்கம், நிசார், ரோலக்ஸ் ஆசிக், பொன் சுரேஷ், கலங்கல் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ர் பகுதியில் 3 யானைகள் குட்டிகளுடன் வனத்தை விட்டு வெளியேறி குப்பைபாளையம் பள்ளத்து வழியாக ஊருக்குள் புகுந்தது. அதேபோல பச்சான்வாயல் பகுதியில் யானைக் கூட்டங்கள் நேற்று இரவு தோட்டத்தில் புகுந்து சேதப்படுத்தியது. கோட்டைக்காடு பகுதியில் நாயக்கர் தோட்டத்தில் இருந்து வெளியேறி சாலையில் உயரமாக நடந்து வந்தது.
அப்போது அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை முட்டி தள்ளி ஆக்ரோஷமாக ஓடியது. இதனால் அப்பகுதியில் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. யானையை விரட்ட உடனடியாக வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பாக முதியோர்களுக்கு உணவு வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: