சட்டீஸ்கரில் பழங்குடியின வாலிபரை தாக்கிய பாஜ எம்எல்ஏ மகன் மீது வழக்கு

பெமட்டெரா: சட்டீஸ்கரில் தசரா விழாவின் போது பழங்குடியின வாலிபரை தாக்கிய பாஜ எம்எல்ஏ மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டீஸ்கர் மாநிலம் பெமட்டெரா மாவட்டத்தை சேர்ந்தவர் மணிஷ் மாண்ட்வி(18).செச்சன்மெட்டா என்ற கிராமத்தில் கடந்த 13ம் தேதி தசரா விழா நடந்தது. இந்த விழாவின் போது பாஜ எம்எல்ஏ ஈஸ்வர் சாகுவின் மகன் கிருஷ்ணா சாகுவுக்கும் ராகுல் துருவ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை தீர்க்க சென்ற போது கிருஷ்ணா சாகுவும், அவரது நண்பர்களும் தன்னை தாக்கினர் என்று மணிஷ் மாண்ட்வி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து எம்எல்ஏவின் மகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சட்டீஸ்கரில் பழங்குடியின வாலிபரை தாக்கிய பாஜ எம்எல்ஏ மகன் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: