மூடா முறைகேடு வழக்கில் விசாரணையை எதிர்கொண்டுவரும் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜ வலியுறுத்திவரும் நிலையில், மூடா தலைவர் கே.மரிகவுடா ராஜினாமா செய்துள்ளார். மூடா தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளருக்கு நேற்று கடிதம் எழுதினார். தனது ராஜினாமா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மரிகவுடா, ‘முதல்வர் சித்தராமையாவின் வழிகாட்டுதலின் பேரில் நான் ராஜினாமா செய்தேன். அதுமட்டுமல்லாது எனக்கு உடல்நல பிரச்னைகளும் உள்ளது. அதனால் தான் ராஜினாமா செய்தேனே தவிர, எனக்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை. ’ என்றார்.
The post சித்தராமையா மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு முறைகேடு புகாரில் சிக்கிய மூடா தலைவர் ராஜினாமா appeared first on Dinakaran.