கால்வாயில் அடித்து செல்லப்பட்ட தாய் பலி, மகளை தேடும் பணி தீவிரம்

ரெய்ச்சூர் தாலுகா, பிச்சாலி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பி.யட்லாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சுஜாதா (33). இவர் தனது மகள் ஷ்ரவாணியுடன்(11) கால்வாயில் துணி துவைக்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், கால்வாயில் அடித்து சென்றிருக்கலாம் என கிராமத்தினர் கால்வாயில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுமார் 4 மணிநேரம் போராடி சுஜாதாவின் உடலை மீட்டர். சிறுமியை தேடிவருகின்றனர்.

The post கால்வாயில் அடித்து செல்லப்பட்ட தாய் பலி, மகளை தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: