திருமங்கலத்தில் 16ம் தேதி உங்களைத்தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம்

 

திருமங்கலம், அக். 14: திருமங்கலம் தாலுகா அளவிலான உங்களைத்ததேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கீழ் குறைதீர்க்கும் சிறப்பு முகாம், கலெக்டர் சங்கீதா தலைமையில் நாளை மறுநாள் (அக்.16) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பின், மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தாலுகாவில் இரண்டு நாட்கள் கலெக்டர் தங்கயிருந்து பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கலெக்டர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு உரிய நிவாரண நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி திருமங்கலம் தாலுகாவில் நாளை மறுநாள் (அக்.16) உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் சங்கீதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் இதில் பங்கேற்க உள்ளனர். இது குறித்து திருமங்கலம் தாசில்தார் மனேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அக்.16ம் தேதி உங்களைத்தேடி உங்கள் ஊரில் கீழ் மாவட்ட கலெக்டர் தலைமையில் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வு பணிகள் நடைபெற உள்ளது. 16ம் தேதி மாலை திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நேரில் தெரிவிக்கலாம்’’ என கூறப்பட்டுள்ளது.

The post திருமங்கலத்தில் 16ம் தேதி உங்களைத்தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: