மாநகர பகுதியில் கஞ்சா விற்ற 5 பேர் கைது

 

திருச்சி, அக்.14: திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர், அப்போது பாலக்கரை கூனிபஜார் பகுதியில் கஞ்சா விற்றதாக, பாலக்கரை பகுதியைச் சேர்ந்த சதிஷ்குமார் (25) மீது பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர், மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று எடமலைப்பட்டி புதூர் மில்காலனி பகுதியில் கஞ்சா விற்றதாக ராம்ஜிநகர் பகுதியை சேர்ந்த பால்ராஜ் (35), மலைக்கோட்டை கள்ளர்தெரு பகுதியில் கஞ்சா விற்றதாக இபி ரோடு பகுதியை சேர்ந்த முத்துகருப்பன் (29) மற்றும் காந்திமார்க்கெட் உப்பிலியா தெரு பகுதியில் கஞ்சா விற்றதாக இபி ரோடு பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு(20) மற்றும் கல்லுக்குழி அருகே கஞ்சா விற்றதாக சுப்புரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த பெர்ணான்டு ஜோசின்(23) ஆகியோரை கண்டோன்மென்ட் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post மாநகர பகுதியில் கஞ்சா விற்ற 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: