துறையூர் அருகே கள்ளிக்குடியில் பகுதி நேர நியாய விலை கடை

 

துறையூர், அக்.14: திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கள்ளிக்குடியில் பகுதி நேர நியாய விலை கடையை ஸ்டாலின் குமார் எம்எல்ஏ திறந்து வைத்தார். துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னுசங்கம்பட்டி ஊராட்சியில் உள்ள கள்ளிக்குடி கிராம மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க. மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தேவரப்பம்பட்டி ரேஷன் கடைக்கு நடந்து சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர்.

கள்ளிக்குடி கிராம மக்கள் எங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைத்துத் தருமாறு கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று கள்ளிக்குடி மக்களின் நிரந்தர தீர்வாக கிராமத்தில் பகுதி நேர நியாயவிலை கடையை அமைத்து கொடுத்து பயன்பாட்டுக்கு ஸ்டாலின் குமார் எம் எல் ஏ திறந்து வைத்து ரேஷன் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

The post துறையூர் அருகே கள்ளிக்குடியில் பகுதி நேர நியாய விலை கடை appeared first on Dinakaran.

Related Stories: