மகாராஷ்டிராவில் பீரங்கி குண்டு வெடித்து 2 அக்னி வீரர்கள் பலி

நாசிக்: மகாராஷ்டிரா மாநிலத்தில் பயிற்சியின்போது பீரங்கி குண்டு வெடித்ததில் அக்னி வீரர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பீரங்கி பயிற்சி மையம் இயங்கி வருகிறது. அக்னி வீரர்கள் திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் நேற்று வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பீரங்கியில் இருந்த குண்டு வெடித்தது. இதில் ஐதராபாத் பீரங்கி படையை சேர்ந்த கோஹில் விஸ்வராஜ் சிங்(20) மற்றும் கன்னர் சைகத்(21) ஆகியோர் படுயாமடைந்தனர். உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மகாராஷ்டிராவில் பீரங்கி குண்டு வெடித்து 2 அக்னி வீரர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: