தியாகிகள் எவ்வித சிரமமுமின்றி பேருந்துகளில் பயணிக்கலாம்: அமைச்சர் சிவசங்கர் அறிக்கை

சென்னை: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கை: சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள் உள்ளிட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், தமிழ்நாடு முழுவதும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு, பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வயது முதிர்வு காரணமாக, தனியாக பேருந்தில் பயணம் செய்திட இயலாத நிலையில், உடன் பயணிக்கும் உதவியாளருக்கும் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகைகள் குறித்து 2010, 2020 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் அரசாணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 1.6.2024 முதல் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் கட்டணமில்லா பயணச் சலுகை இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.

மேற்குறிப்பிட்டுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை முறையாக நடத்துநர்கள் பின்பற்றவில்லை எனத் தெரிய வருகிறது. எனவே, இனிவரும் காலங்களில் பயனாளிகள் எவ்வித சிரமமுமின்றி, பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் வகையில் அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கும், உயர் அலுவலர்களுக்கும் மற்றும் ஓட்டுநர் / நடத்துநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில், பயனாளிகள் எவ்வித சிரமமுமின்றி, பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

The post தியாகிகள் எவ்வித சிரமமுமின்றி பேருந்துகளில் பயணிக்கலாம்: அமைச்சர் சிவசங்கர் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: