பொன்னமராவதி அருகே கொன்னையம்பட்டி கிராமத்தில் கபடி போட்டி

 

பொன்னமராவதி,அக்.8: பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டி கபடி போட்டி நடந்தது. கொன்னையம்பட்டியில் வெற்றிவேல் கபாடிக்குழு, ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடத்திய கபடிப்போட்டி நடந்தது. இந்த போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 32 அணிவீரர்கள் பங்குபெற்று கபடி விளையாடியுள்ளனர்.

இதில் முதல்பரிசை பிளாவூர் அணியினரும், இரண்டாம் பரிசை எஸ்பிஎன் கன்ஸ்செக்சன் அணியினரும், 3வது பரிசை திருக்கஸ்டியூர் அணியினரும், 4வது பரிசை மாங்குடி அணியினரும் பெற்றனர். வெற்றிபெற்ற அணியினக்கு ஊராட்சி மன்றத்தலைவர் மாரிக்கண்ணுபிச்சன், முன்னாள் ஊராட்சித்தலைவர் முருகேசன், கூட்டுறவு சங்கச்செயலர் செல்வம், சந்திரன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். ஊராட்சித்தலைவர் மாரிக்கண்ணுபிச்சன், கண்ணன், முத்துச்சாமி, ஐயப்பன் ஆகியோர் வெற்றிக்கோப்பை வழங்கினர்.

 

The post பொன்னமராவதி அருகே கொன்னையம்பட்டி கிராமத்தில் கபடி போட்டி appeared first on Dinakaran.

Related Stories: