ரெட்டியார்சத்திரம் கம்பளிநாயக்கன்பட்டியில் ஆதார் புதுப்பிப்பு முகாம்

ரெட்டியார்சத்திரம், செப். 27: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டியில் சிறப்பு ஆதார் முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி தலைமை வகித்து துவக்கி வைத்தார். இம்முகாமில் அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது ஆதார் கார்டை புதுப்பித்து கொண்டனர். இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்த்திபா, வார்டு உறுப்பினர்கள் செல்வராணி இளங்கோவன், காந்திமதி வேலுச்சாமி, ஊராட்சி செயலாளர் செந்தில் முருகன், பணித்தள பொறுப்பாளர் செந்தில் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post ரெட்டியார்சத்திரம் கம்பளிநாயக்கன்பட்டியில் ஆதார் புதுப்பிப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: