திருவரங்குளத்தில் மகளிர் சுயஉதவி குழுவினர் பங்கேற்ற உணவு திருவிழா

புதுக்கோட்டை, செப்.26: திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான உணவுத்திருவிழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வாழ்வாதார இயக்க கட்டிடத்தில் தமிழக மாநில புதுக்கோட்டை மாவட்ட மேலாண்மை அலகு சார்பில் திருவரங்குளம ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 48 ஊராட்சிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கான உணவுத் திருவிழா நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி தலைமையில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம ஊராட்சி செந்தில்குமார் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கப்பட்டது.

உணவு திருவிழாவில் 48 ஊராட்சிகளை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் கலந்துகொண்டு பல்வேறு வகையான சிறுதானிய உணவு வகைகள் தயார் செய்து காட்சிப்படுத்தினர். ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சுருதி, உதவி திட்ட அலுவலர் ஆசீர்வாதம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உணவு திருவிழாவை பார்வையிட்டனர். மகளிர் குழுவினர் தயார் செய்து வந்த உணவுகளை அங்கன்வாடி அலுவலர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள் உணவு வகைகளை சுவைத்து பார்த்து மதிப்பீடு வழங்கினர். முன்னதாக அனைவரையும் திருவரங்குளம் வட்டார வாழ்வாதார இயக்க மேலாளர் சகுந்தலாதேவி வரவேற்றுப் பேசினார். முடிவில் நிஷாந்தி நன்றி கூறினார். ஏராளமான மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்

The post திருவரங்குளத்தில் மகளிர் சுயஉதவி குழுவினர் பங்கேற்ற உணவு திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: