கஞ்சா விற்ற 4 பேர் கைது

மதுரை, செப். 27: மதுரை ஜெய்ஹிந்த்புரம் எஸ்.ஐ மோகன்லால் தலைமையில் போலீசார் சோலைஅழகுபுரம் இந்திராநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மரக்கடை அருகில் கஞ்சாவை பொட்டலங்களாக மடித்து சிலர் விற்பனை செய்வதை பார்த்தனர். அவர்களை சுற்றிவளைத்து போது, சோலைஅழகுபுரத்தை சேர்ந்த சூர்யா என்ற மண்டை ஓடு சூர்யா(20) மட்டும் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில், வீட்டில் பதுங்கியிருந்த அதே பகுதியை சேர்ந்த மணிபாரதி(20). யோகராஜ்(23). துர்கேஷ்வரன்(19) ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலே 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

The post கஞ்சா விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: