பெருங்குளம் பகுதிக்கு செல்லும் தார்ச்சாலையை சீரமைக்க கோரிக்கை

மண்டபம்,செப்.27: உச்சிப்புளி அருகே பெருங்குளம் பகுதிக்கு செல்லும் தார்ச்சாலை சேதமடைந்துள்ளதால், அந்த சாலை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி அருகே ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பெருங்குளம் பகுதிக்கு பிரிவு சாலையாக தார்ச்சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலையில் பல்வேறு பகுதியில் மிகவும் பள்ளம் மேடுகள் மற்றும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லவும் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ போன்ற வாகனத்தில் செல்லவும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதனால் சேதமடைந்த தார்ச்சாலையை அப்புறப்படுத்தி அப்பகுதியில் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கு தமிழக நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பெருங்குளம் பகுதிக்கு செல்லும் தார்ச்சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: