செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிக்கு மீண்டும் நீர்வரத்து..!!

காஞ்சிபுரம்: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 220 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. 3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 1100 மில்லியன் கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 109 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி சுற்றுப்பகுதியில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 24 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 60 மில்லியன் கன அடியாக உள்ளது.

The post செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிக்கு மீண்டும் நீர்வரத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: