காஞ்சிபுரத்தில் வரும் 28ம்தேதி நடைபெறும் திமுக பவள விழாவில் பங்கேற்க வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு: மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வரும் 28ம்தேதி நடைபெறும் திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் தெற்கு மாவட்டம் சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் காஞ்சிபுரம் கலைஞர் பவள விழா மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் இனியரசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ அனைவரையும் வரவேற்றார்.

மாவட்ட துணை செயலாளர்கள் செல்வம் எம்பி, மலர்விழி, கோகுலக்கண்ணன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், வரும் 28ம்தேதி திமுக பவள விழா காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி விளையாட்டு திடலில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். சிறுவேடல், பொன்னேரிக்கரை, மாநகரம், விழா நடைபெறும் பகுதி என 4 இடங்களில் பிரமாண்ட வரவேற்பு அளிப்பது, கூட்டத்திற்கு 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொண்டர்களை அழைத்து வருவது, பவளவிழா கூட்டத்தை சிறப்பாக நடத்திக்கொடுக்க திமுக நிர்வாகிகள் பாடுபட வேண்டும்.

கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், சிறந்த வரவேற்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில், காஞ்சிபுரம் எம்எல்ஏ ஏழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், வர்த்தக அணி மாநில துணை செயலாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ அரசு, ஒன்றிய செயலாளர்கள் குமார், ஞானசேகரன், குமணன், சேகர், குமார், சத்யசாய் கண்ணன், தம்பு, சிவக்குமார், ஏழுமலை, சிற்றரசு, சுந்தரமூர்த்தி, எழிலரசன், சரவணன்,

பேரூர் செயலாளர்கள் பாண்டியன், பாரிவள்ளல், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், நாகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வெளிக்காடு ஏழுமலை, சசிகுமார், சிகாமணி, சீனிவாசன், இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ், மகளிர் அணி அமைப்பாளர் செல்வி, மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் சுரேஷ்குமார், ராம் பிரசாத், தமிழ்செல்வன், நிர்வாகிகள் நாத்திகம் நாகராஜன், செவிலிமேடு மோகன், சாட்சி சண்முகசுந்தரம், மாநகர நிர்வாகிகள் முத்து செல்வன், ஜெகநாதன், சுப்பராயன், பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், வெங்கடேசன், திலகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் வரும் 28ம்தேதி நடைபெறும் திமுக பவள விழாவில் பங்கேற்க வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு: மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: