திருவெறும்பூர் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐயை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை!

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. கிருஷ்ணசாமியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. வருண் குமார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். காவலரிடம் சாதி ரீதியாக செயல்பட்டது உள்பட பல புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்றவர் தாக்கப்பட்ட வழக்கில், ஒருதலைப் பட்சமாக செயல்பட்டதாக துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் சண்முக சுந்தரம், கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

The post திருவெறும்பூர் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐயை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை! appeared first on Dinakaran.

Related Stories: