இதுகுறித்து வட்டாரங்கள் கூறுகையில்,‘‘ மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் வெளியுறவுத்துறையின் நிலைக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கல்வித்துறை நிலைக்குழு தலைவராக திக்விஜய் சிங், வேளாண்துறை நிலைக்குழு தலைவராக பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவை சேர்ந்த எம்பி சப்தகிரி ஒலாகா ஊரக வளர்ச்சி துறையின் நிலைக்குழுவுக்கு தலைமை வகிப்பார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்தன. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வெளியுறவுத்துறை நிலைக்குழு தலைவர் பதவி காங்கிரஸ் வசம் செல்கிறது.
The post மக்களவை நிலைக்குழு தலைவர் பதவி வெளியுறவுத்துறை-சசிதரூர் கல்வித்துறை-திக்விஜய் சிங்: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Dinakaran.