விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

அரூர், செப்.17:அரூர் அடுத்த எச்.அக்ஹாரம் புதியநகர் கிராமத்தில் விநாயகர், முத்து மாரியம்மன், காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற விழாவின் முதல் நாளில் கணபதி ஹோமம், யாக சாலை பூஜை, தீர்த்தகுடம் எடுத்தல், முளைப்பாரி, பால்குடம் ஊர்வலமும், அதனை தொடர்ந்து காலை சக்தி கணபதி பூஜை, யாக சாலை பூஜை, கலச பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு புனித தீர்த்தத்தால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

The post விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Related Stories: