அதில் பேசிய நபர், தான் சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணி மேற்பார்வையாளராக வேலைபார்க்கும் விஜய் (25) என்றும், முதியவர் ரமணியின் கைப்பை சாலையில் கிடந்ததாகவும், தான் இருக்கும் இருக்குமிடத்தையும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்நபர் குறிப்பிட்ட இடத்துக்கு முதியவர் ரமணி சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த தூய்மை பணி மேற்பார்வையாளர் விஜய், கலாஷேத்ரா சாலையில் தூய்மை பணியின்போது கீழே கிடந்த கைப்பையை கண்டெடுத்ததாகவும் கூறியுள்ளார். பின்னர் பகுதி மேற்பார்வையாளர் செல்வம் முன்னிலையில் முதியவர் ரமணியிடம் தூய்மை பணி மேற்பார்வையாளர் விஜய் கைப்பையை ஒப்படைத்தார். இருவருக்கும் முதியவர் ரமணி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
The post திருவான்மியூரில் முதியவர் தவறவிட்ட கைப்பையை ஒப்படைத்த தூய்மை பணியாளர் appeared first on Dinakaran.