தமிழர்கள் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம்: முதல்வர் பதிவு

சென்னை: தமிழர்கள் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிட்டுள்ள சமூகவலைதளப் பதிவு: புரட்டுக் கதைகளுக்கும் – வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலானது சுயமரியாதை என இனமான உணர்வூட்டி நிமிர்நடை போட வைத்த பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரட்சி வணக்கம். இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம். ஆயிரமாண்டு மடமையைப் பொசுக்கிய அவரது அறிவுத்தீதான், நமது பாதைக்கான வெளிச்சம்! அந்த வெளிச்சத்தில் சமத்துவ உலகத்தை நிறுவுவதே நமது தலையாய பணி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழர்கள் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம்: முதல்வர் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: