சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே செம்மஞ்சேரியில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலி

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே செம்மஞ்சேரியில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மாம்மல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் சாலையில் மினி லாரி பழிதாகி சாலையோரம் நின்றுகொண்டிருந்தது. இந்த நிலையில் அதே மார்க்கத்தில் பின்னால் வந்த கார் ஒன்று வலைவு பகுதியில் அதிவேகமாக வந்துள்ளது.

அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த மினிலாரியின் பின் பகுதியில் மோதி நசுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள இளைஞர்களின் உடலை மீட்கும் பணியில் கேளம்பாக்கம் போலீசார் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

காலை நேரத்தில் ஏற்பட்ட விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே செம்மஞ்சேரியில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: