20ம் தேதி மீண்டும் வழக்கை விசாரித்த நீதிபதி (3.09.2024) இன்றுவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தார். 2 முறை காவலை நீட்டித்த நீதிமன்றத்தில் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் 22 மீனவர்களையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். 3 படகில் ஒரு படகில் 12 பேரும், மீதி 2 படகுகளில் 10 பேரும் என 22 பேரை கைது செய்தனர். இதில் கைதான மீனவர்களில் 12 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ; எஞ்சிய 10 பேருக்கு செப்டம்பர். 10 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை மதிப்பில் ரூ.1.5 கோடி அபராதமானது இந்திய ரூபாய் -மதிப்பில் சுமார் ரூ.42 லட்சம் ஆகும்.அபராதத்தை கட்ட தவறும்பட்சத்தில் 6 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
The post தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.