அண்ணாமலை வெளிநாடு சென்றதால் பாஜவினர் நிம்மதியாக இருப்பார்கள்: அதிமுக மாஜி அமைச்சர் நையாண்டி

அலங்காநல்லூர்: அண்ணாமலை வெளிநாடு சென்றுள்ளதால், பாஜவினர் நிம்மதியாக இருப்பார்கள் என அதிமுக மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நையாண்டி செய்துள்ளார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: அண்ணாமலை வெளிநாடு சென்றிருப்பதால், தமிழகத்தில் பாஜகவினர் சிறிது காலத்திற்கு நிம்மதியாக இருப்பார்கள். இனிவரும் 3 மாத காலத்துக்கு தமிழ்நாடு அமைதியாக இருக்கும்.

தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதி, தொழில் நிதி, ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஒன்றிய அரசு முடக்கி வைத்துள்ளது. இவைகளை விடுவிக்க தற்போதைய தமிழக பாஜக தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும். புதிய கல்விக்கொள்கை திட்டத்தை காரணம் காட்டி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை நிறுத்தக் கூடாது. கல்விப் பணிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஒன்றிய அரசு நிதி வழங்க தற்போதைய பாஜக தலைவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post அண்ணாமலை வெளிநாடு சென்றதால் பாஜவினர் நிம்மதியாக இருப்பார்கள்: அதிமுக மாஜி அமைச்சர் நையாண்டி appeared first on Dinakaran.

Related Stories: